உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மின்கம்பம் உடைந்து ஊழியர் பலி; இழப்பீடு கோரி உடலை பெற மறுப்பு

மின்கம்பம் உடைந்து ஊழியர் பலி; இழப்பீடு கோரி உடலை பெற மறுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மின் கம்பம் உடைந்து விழுந்ததில் ஊழியர் பலியானார். இழப்பீடு கோரி பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.திருநெல்வேலி தச்சநல்லுார், சுகர்மில் காலனியில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு பழுதான மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் நடும் பணி நடந்தது. இதில் மின்வாரிய ஊழியர்களுடன் தற்காலிக பணியாளரான ஆலங்குளம் மருதம்புத்துாரைச் சேர்ந்த பத்ரகாளி, 52, என்பவரும் பணியாற்றினார். பழைய மின்கம்பம் திடீரென உடைந்து அருகில் நடப்பட்ட புதிய மின்கம்பம் மீது விழுந்ததில் இரண்டு சிமென்ட் மின் கம்பங்களும் விழுந்து உடைந்தன.இதில் கீழே விழுந்த பத்திரகாளி இடுப்பு எலும்புகள் முறிந்தும், தலைக்காயம் ஏற்பட்டும் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒரு மணி நேரம் அங்கேயே கிடந்த அவரது உடல் மீட்கப்பட்டு ஆட்டோவில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.அவர் தற்காலிக பணியாளர் என்பதால் அவருக்கு எந்த இழப்பீடும் அரசு சார்பில் வழங்கப்படாது என மின்வாரியம் கைவிரித்து விட்டது.எனவே அவரது குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி, சி.ஐ.டி.யு., மின்வாரிய ஊழியர்கள் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற மறுத்து விட்டனர். பத்ரகாளிக்கு மனைவியும் இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். அவர் கடந்த, 23 ஆண்டுகளாக மின்வாரிய பணியில் ஈடுபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Yaro Oruvan
ஜன 02, 2025 09:10

திராவிஷ மாடல் .. அவர் கள்ள சாராயம் குடித்துவிட்டு வேலைக்கு வந்திருக்கணும் .. நல்ல முறையில் வேலைக்கு வந்தது அவர் தப்பு .. ஒருவேளை ஒட்டு வங்கி கும்பலை சேர்ந்தவராக இருந்தால் இழப்பீடு தருவானுவ


முக்கிய வீடியோ