உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கண்ணில் மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு

கண்ணில் மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே தடியாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி சாந்தி அற்புதமணி 60. அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி 6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார்.இவர்களது மகன், மகள்கள் வெளியூரில் வசிக்கின்றனர். கணவன்,- மனைவி இங்குள்ளனர். நேற்று அந்தோணி வெளியூர் சென்றிருந்தார்.வீட்டில் சாந்தி தனியாக இருந்தார். வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் சாந்தி முகம், கண்களில் மிளகாய் பொடி துாவினார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ