உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 20 ஆண்டு சிறை

திருநெல்வேலி:சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி, மேலப்பாளையத்தை சே ர்ந்த 8 வயது சிறுமிக்கு, 2024 செப்., 14ல் அதே பகுதியை சேர்ந்த முகமது அலி, 59, பாலியல் தொல்லை கொடுத்தார். திருநெல்வேலி மகளிர் போலீசார் அவரை கை து செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு போக்சோ கோர்ட் நீதிபதி சுரேஷ் குமார், முகமது அலிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ