உள்ளூர் செய்திகள்

கைதியிடம் விசாரணை

திருநெல்வேலி:2012-ல் கொலை செய்யப்பட்ட தி.மு.க., அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் திருநெல்வேலி சிறையில் உள்ள கைதி சுடலைமுத்துவிடம் நேரில் மூன்று மணி நேரத்துக்கும் மேல் விசாரித்தார். சுடலைமுத்து, ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்றவர். ராமஜெயம் கொலைக்கு முன் அவர் திருச்சி சிறையில் இருந்த போது, மற்றொரு கைதியுடன் அலைபேசியில் பேசியுள்ளார். அதில் சந்தேகம் எழுந்தது. அதன்படி தற்போது விசாரணை, நடக்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி