மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
சுரண்டை : சுரண்டையில் நாளை (31ம் தேதி) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கிறது. சுரண்டையில் இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நாளை (31ம் தேதி) நடக்கிறது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ரமேஷ் தலைமை வகிக்கிறார். ஆறுமுகசாமி, பி.பி.எம். ஆறுமுகசாமி, ரஜினிராஜ், முருகேசன், அருண்பாலாஜி முன்னிலை வகிக்கின்றனர். முருகேசன் வரவேற்கிறார். டாக்டர் கோதண்டராமராவ் ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். ரத்தினம், பரமசிவன், விஜயகுமார், முருகையாபாண்டியன், கணேசன், சமுத்திரம், ராஜா, லெட்சுமணன் மற்றும் பலர் திரளாக கலந்து கொள்கின்றனர். பின்னர் வரும் 4ம் தேதி மாலை விநாயகர் சிலைகள் பஸ் ஸ்டாண்ட் செல்வவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைகிறது. தொடர்ந்து இரவு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்படும் என நகர பா.ஜ., தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.
29-Sep-2025
25-Sep-2025