சிறுமிக்கு தொல்லை வாலிபர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலியை அடுத்த பொன்னாக்குடியைச் சேர்ந்தவர் ஜெபஸ்தியான் 26. மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் இரண்டு வயது சிறுமியை தனது வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். ஜெபஸ்தியானை போக்சோவில் கைது செய்த மகளிர் போலீசார் பின்னர் சிறையிலடைத்தனர்.