உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருந்தவேமாட்டாங்கய்யா.. அதிகாரிகள் அலட்சியத்தால் நெடுஞ்சாலை மீடியனில் கொடிகள்

திருந்தவேமாட்டாங்கய்யா.. அதிகாரிகள் அலட்சியத்தால் நெடுஞ்சாலை மீடியனில் கொடிகள்

திருவள்ளூர், சென்னை - பள்ளிக்கரணையில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ, 23, என்ற பெண் லாரியில் சிக்கி இறந்தார்.இதையடுத்து உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலையில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.இந்நிலையில் தற்போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை - ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை உட்பட பல பகுதிகளில் மீடியன் மற்றும் சாலையோரம் அரசியல் கட்சியினர் கட்சி நிகழ்ச்சிகள், பிறந்த நாள், திருமணம் மற்றும் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கம்பங்கள், பேனர்கள வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததே காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பேனர் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
மார் 01, 2025 08:07

அதிகாரிகள் தடுத்தால் திருட்டு திராவிடனுங்க பட்டப் பகலிலேயே வெட்டுவாங்களே. தேவையா? தத்தி மக்களுக்கு புரியணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை