உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடமாநில நபர் மீது தாக்குதல் தட்டிக் கேட்டவருக்கு அடி, உதை

வடமாநில நபர் மீது தாக்குதல் தட்டிக் கேட்டவருக்கு அடி, உதை

மணலி: மணலி, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 36. நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரது வீட்டின் வெளியே சத்தம் கேட்டுள்ளது.வெளியே சென்று பார்த்தபோது, வடமாநில வாலிபர் ஒருவரிடம், நான்கு பேர் வீண் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதை, சுரேஷ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நான்கு பேர் கும்பல், அவரை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.பின், சாலையில் கிடந்த கல்லை எடுத்து அவர் மீது வீசி விட்டு தப்பியோடினர். இதில், சுரேஷ்குமார் தலையில் பலத்த காயமடைந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை, மணலி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி