உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுற்றுச்சுவர் இல்லாத சுடுகாடு: அரிசந்திராபுரம் வாசிகள் அச்சம்

சுற்றுச்சுவர் இல்லாத சுடுகாடு: அரிசந்திராபுரம் வாசிகள் அச்சம்

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரத்தில் இறந்தோரின் உடல்களை எரியூட்டுவதற்கு, சின்னம்மாபேட்டை- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வழியாக, தினமும் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுடுகாட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்து பாதிக்கும் மேற்பட்ட சுவர் உடைந்து விழுந்துள்ளது.இதனால். சுடுகாட்டில் சடலம் எரிவதை பார்த்து, இச்சாலை வழியே பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி