உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மயங்கி விழுந்த இன்ஜினியர் பலி

மயங்கி விழுந்த இன்ஜினியர் பலி

மப்பேடு, மார்ச் 8-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 29; இன்ஜினியர். இவருக்கு திருபா, 24, என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர், மப்பேடு அருகே பண்ணுாரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பண்ணுாரில் உள்ள அறையில் கிளம்பி கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தவரை, அருகிலிருந்தோர் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார் உடலை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருபா அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ