உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உடைந்த பாலத்தால் சத்தியவேடு சாலையில் அச்சம்

உடைந்த பாலத்தால் சத்தியவேடு சாலையில் அச்சம்

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் இருந்து குருத்தானமேடு கிராமத்திற்கு செல்லும் சாலை, ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ள சாலையாகும். அந்த சாலையின், குறுக்கே செல்லும் கால்வாய் மீது சிறு பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் தடுப்புகள் உடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால், ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்கின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சற்று தடுமாறினாலும், கால்வாயில் வாகனத்துடன் கவிழ்ந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் அந்த பாலத்தை கடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, அந்த பாலத்தில் தடுப்பு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை