உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 40 கிலோ குட்கா கடத்தியவர் கைது

40 கிலோ குட்கா கடத்தியவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி, இரு மூட்டைகளுடன் டூ-வீலரில் சென்ற நபரை நிறுத்தி சோதனையிட்டனர். மூட்டைகளில் இருந்த, 40 கிலோ எடை குட்கா பண்டல்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 40 ஆயிரம் ரூபாய். அதை ஆந்திராவில் இருந்து கடத்திய, கும்மிடிப்பூண்டி அடுத்த பிரித்வி நகர் பகுதியை சேர்ந்த நசுருதீன், 29, என்பவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி