உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடிப்பூண்டி சிப்காட் முகப்பில் இடையூறாக நிற்கும் வாகனங்கள்

கும்மிடிப்பூண்டி சிப்காட் முகப்பில் இடையூறாக நிற்கும் வாகனங்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி 'சிப்காட்' தொழிற்பேட்டையில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு, தினசரி 1,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை பிரிந்து, 'சிப்காட்' நுழைவாயில் வழியாக வாகனங்கள் சென்றுவர வேண்டும்.சிப்காட் சாலைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிப்காட் வளாகத்தில் உள்ள கட்டண பார்க்கிங் வளாகங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. 'பார்க்கிங்' வளாகங்களில் தவிர்க்கும் சில வாகனங்கள், சிப்காட் நுழைவாயில் முகப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயப் பகுதியாக மாறியுள்ளது.இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கும்மிடிப்பூண்டி போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும். மேலும் முறையாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

30 கி.மீ., அணிவகுக்கும் கன்டெய்னர் லாரிகள்

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் கையாளப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தால், சாலையில் 30 கி.மீ., துாரத்திற்கு கன்டெய்னர் லாரிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.சென்னை துறைமுகத்தை பொறுத்தவரை, சி.சி.டி.எல்., மற்றும் சி.ஐ.டி.பி.எல்., தனியார் நிறுவனங்களின் கன்டெய்னர் முனையங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து, ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன.கன்டெய்னர் முனையங்களை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கிரேன் ஆப்பரேட்டர்கள் இருக்க வேண்டும். இதில், சி.ஐ.டி.பி.எல்., எனும் சென்னை பன்னாட்டு பெட்டக முனையத்தில் கன்டெய்னர்கள் 'ஷிப்ட்' செய்யும் கிரேன் ஆப்பரேட்டர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.கன்டெய்னர் முனையங்களை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கிரேன் ஆப்பரேட்டர்கள் இருக்க வேண்டும். தற்போது, 25க்கும் குறைவானவர்களே உள்ளனர். அவர்களும், காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை; மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை; இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை என, மூன்று 'ஷிப்டு'களில் பணிபுரிகின்றனர்.அதேநேரம், துறைமுகத்திற்கு வரும் கன்டெய்னர் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால், கன்டெய்னர் லாரிகள் நாட்கணக்கில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காசிமேடு ஜீரோ கேட் துவங்கி டோல்கேட், திருவொற்றியூர், எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், சடையன் குப்பம், எம்.எப்.எல்., ஆண்டாள்குப்பம், மணலிபுதுநகர், கவுண்டர்பாளையம், அத்திப்பட்டு என, 30 கி.மீ., துாரத்திற்கு வரிசை கட்டி நின்றன. இதனால், நேற்று அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதில், காசிமேடு ஜீரோ கேட் துவங்கி திருவொற்றியூர் வரையில் கன்டெய்னர் லாரிகளுக்கு தனிப்பாதை உள்ளது. எர்ணாவூர் சத்தியமூர்த்தி நகர் துவங்கி, அத்திப்பட்டு வரை பொதுப் பாதையில் பயணிக்கின்றன.இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தனியார், அரசு பணியாளர்கள் என, அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தினசரி பிரச்னையால் மக்கள் பாதிப்பு

இதுகுறித்து, அனைத்து துறைமுக டிரைலர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலர் சுரேஷ்பாபு கூறியதாவது:கன்டெய்னர்களை கிரேன் வாயிலாகக் கையாள புதிதாக சேர்க்கப்படும் ஆப்பரேட்டர்கள் அனுபவமின்றி, 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்படுகின்றனர். புதிய ஆப்பரேட்டர்கள், அனுபவமின்றி நேரடியாக பெரிய சரக்கு பெட்டகங்களை கையாள்வதால், 10 நிமிடத்தில் முடிக்க வேண்டிய பணிக்கு, 2 மணி நேரமாகிறது. இதனால், கன்டெய்னர் லாரிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.நான்கு மாதங்களாக தொடரும் இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால், ஓட்டுனர்கள் குடிநீர், கழிப்பறை, சாப்பாட்டு வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, லாரியில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த விஷயத்தில், சென்னை துறைமுக நிர்வாகம் கவனம் செலுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை