உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்தில் மூழ்கிய2 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கிய2 சிறுவர்கள் பலி

திருத்தணி:திருத்தணி அருகே இரு சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலியாயினர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்வர்கள் ஆறுமுகம் மகன் பிரவீன், 10, முருகேசன் மகன் கிரிநாத், 10. இருவரும் உறவினர்கள். திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பள்ளி சென்றவர்கள் மாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். பின், கிரிநாத், பிரவீன் இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக கன்னிகாபுரம் குளக்கரை சென்றனர். அங்குள்ள, குட்டைக்கு சென்ற இருவரும் கால் கழுவ இறங்கிய போது இருவரும் தண்ணீர் மூழ்கினர். தகவல் அறிந்ததும் சிறுவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சென்று சிறுவர்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சிறுவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுவர்களின் தந்தை இருவரும் சகோதரர்கள் ஆவர். சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை