உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு

பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 டி.எம்.சி., நீர் இருப்பு

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் நடுவே, பூண்டி கிராமத்தில் சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் உள்ளது. ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வினாடிக்கு, 433 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி., யில், 2 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டம், 35 அடி. தற்போது, 31.38 அடி உள்ளது. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 380 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை