குப்பை சேகரிப்பு 60 வாகனங்கள் துவக்கி வைப்பு
ஆவடி:ஆவடி மாநகராட்சி பகுதிகளில், திடக்கழிவு அள்ளும் வாகனங்கள், அடிக்கடி பழுதாகின. இதனால், குப்பை அள்ளும் பணியில் தடை ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, மாநகராட்சி சார்பில், 6 கோடி ரூபாய் மதிப்பில், 40 இலகு ரக வாகனங்கள், 20 கனரக வாகனங்கள் என மொத்தம் 60 வாகனங்கள், குப்பை சேகரிப்பு பணிக்காக வாங்கப்பட்டன. இந்த வாகனங்களின் துாய்மை பணியை, அமைச்சர் நாசர், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.