உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கடன் வாங்கி கொடுத்ததால் விபரீதம்: வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

 கடன் வாங்கி கொடுத்ததால் விபரீதம்: வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

ஊத்துக்கோட்டை: கடன் தொல்லையால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊத்துக்கோட்டை அடுத்த மேலக்கரமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பரத், 32; பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி கிரிஜா. பரத், தன் நண்பர்களுக்கு 13 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், நண்பர்கள் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் கிரிஜாவிடம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, கிரிஜா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த பரத், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பென்னலுார்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி