உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆந்திர மது பாட்டில்கள் கடத்தியவர்கள் கைது

ஆந்திர மது பாட்டில்கள் கடத்தியவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற, 'ஸ்விப்ட்' கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 19 ஆந்திர மாநில அரசு மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.மது பாட்டில்களை கடத்திய மீஞ்சூர் அடுத்த, வல்லுார் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 47, கோகுல், 29, ஆகிய இருவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !