மேலும் செய்திகள்
வரும் 20ல் தொழில் பழகுனர் முகாம்
12-Jan-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வாயிலாக, தொழிற்பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம், வரும் 31ம் தேதி, ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.இதில், பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சார்ந்த ஐ.டி.ஐ., பயிற்சியாளருக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபெற உள்ளன.இந்த முகாமில் என்.சி.வி.டி., மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில் கல்வி பயின்ற பயிற்சியாளர் மற்றும் தொழிற்பயிற்சி முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத பயிற்சியாளர், பங்கேற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.மேலும் விபரம் பெற, திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனரை நேரிலோ அல்லது gmail.comஎன்ற இ மெயில் மற்றும் 94442 24363, 94869 39263, 94441 39373 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12-Jan-2025