உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை

முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலை மீது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார். நேற்று ஆவணி மாத கிருத்திகையை ஒட்டி, காலை 8:00 மணிக்கு உத்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர், மயில் மீது வலம் வரும் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு உத்சவர் முருகப்பெருமான், மலைக்கோவிலில் வீதியுலா வந்தார். அதேபோல், நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலிலும், நேற்று கிருத்திகை உத்சவம் கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !