உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு மருத்துவமனையில் மாறிய சடலம் மீண்டும் உறவினரிடம் ஒப்படைப்பு

அரசு மருத்துவமனையில் மாறிய சடலம் மீண்டும் உறவினரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்டிபள்ளியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; கூலித்தொழிலாளி. வயிற்று வலியால் பூச்சி மருந்து அருந்தியவர், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.நேற்று முன்தினம் அவரது உடலை பெற வந்த போது, வேறு ஒருவரின் உடலை பிணவறை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பிணவறை ஊழியர்களிடம் கேட்டபோது, சரியான தகவல் கிடைக்கவில்லை. ஆத்திரமடைந்த உறவினர்கள், பிணவறை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தியதில், நான்கு நாட்களுக்கு முன், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்மாஞ்சி, 55, என்பவர், உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்க வந்தபோது உயிரிழந்தார். அவருடன் பணிபுரிந்தவர்கள், நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெற்றுக்கொள்ள வந்தனர். அப்போது, இறந்த மனோஜ்மாஞ்சியின் உடலுக்கு பதிலாக, ராஜேந்திரன் உடலை பெற்றுச் சென்றதாக தெரிய வந்தது.உடனே போலீசார், முதியவரின் உடலை திரும்ப கொண்டு வருமாறு தகவல் அளித்தனர். இதையடுத்து, அவரது உடல், நேற்று மதியம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு கொண்டு வரப்பட்டது.இதையடுத்து, ராஜேந்திரன் உடலை அவரது உறவினருக்கு வழங்க ஏற்பாடு நடந்தது. அப்போது, சடலம் மாறியதற்கு காரணமாக இருந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறவினர்கள் வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்தனர்.காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.மேலும், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரின் சடலத்தையும், ஆம்புலன்ஸ் வாயிலாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி