உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் 22ல் பிரம்மோற்சவ கொடியேற்றம்

மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் 22ல் பிரம்மோற்சவ கொடியேற்றம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ள புஷ்பகுஜாம்பாள் உடனுறை சிங்கீஸ்வரர் கோவிலில், வரும் 22ம் தேதி, 16ம் ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.நேற்று, காலை 9:00 மணிக்கு பந்தக்கால் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது.பின், நாளை, கிராம தேவதை அபிஷேகமும், 21ம் தேதி விநாயகர் உற்சவமும் நடைபெறும்.பின், 22ம் தேதி, காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். தினமும் காலை, சந்திரசேகர் மற்றும மாலை சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருபாலிப்பர்.வரும், 24ம் தேதி அதிகார நந்தி உற்சவமும், 25ம் தேதி நாக வாகன உற்சவமும், 26ம் தேதி ரிஷப வாகன உற்சவமும், 27ம் தேதி யானை வாகன உற்சவமும் நடைபெறும்.வரும், 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். வரும் 3ம் தேதி கொடியிறக்கத்துடன், 16ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும் என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !