மேலும் செய்திகள்
கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்
09-Oct-2025
திருவாலங்காடு: பெரியகளக்காட்டூரில் பூட்டிய வீட்டை உடைத்து, 6,000 ரூபாய் திருடுபோனது. திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 38. எலக்ட்ரீஷியன். நேற்று காலை வேலைக்கு சென்றார். பின், மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Oct-2025