மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
பொதட்டூர்பேட்டை:கொசஸ்தலை ஆற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். பொதட்டூர்பேட்டை அடுத்த புண்ணியம் கிராமம் அருகே, கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, ஆற்றில் இருந்து மணல் ஏற்றி சென்று கொண்டிருந்த மாட்டுவண்டியை பிடித்தனர். புண்ணியம் காலனியை சேர்ந்த ராஜேந்திரன், 50, என்பரை போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டி ப றிமுதல் செய்யப்பட்டது.