உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாய்க்காலில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

வாய்க்காலில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு அடுத்த, கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 25. இவரது மகள் பூஜா, 3. நேற்று காலை, ரமேஷின் மாமனார் வடிவேலு,வீட்டில் இருந்து அருகிலுள்ள காட்டிற்கு மூலிகை பறிக்க சென்றுள்ளார்.அப்போது குழந்தை பூஜாவும் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. இதை, கவனிக்காத வடிவேலு, இடையில் குறுக்கிட்ட வாய்க்காலை தாண்டி சென்றுள்ளார்.பின்னால் சென்ற பூஜா, அந்த வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தோர் பூஜாவை மீட்டு, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குபரிசோதித்த மருத்துவர்கள், பூஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !