உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

திருத்தணி:திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 38. இவர், தனியார் கொரியர் அலுவலகத்தில், டெலிவரி வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.மதியம் திருத்தணி அடுத்த மத்துார் பகுதியில் கொரியர் கொடுக்க பேருந்தில் சென்றார். அப்போது, மத்துார் ரயில்வே கேட் அருகே இறங்கி நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி