மின் கம்பியில் சிக்கி பசு மாடு பலி
அதிகத்துார்:அதிகத்துார் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பசுமாடு ஒன்று பலியானது. கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45. நேற்று காலை இவரது இரு பசு மாடுகள் மேய்ச்சலுக்கு இந்திரா நகர் பகுதிக்கு சென்றன. அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து ஒரு பசுமாடு பலியானது. கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.