உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் மூலவரை தரிசிக்க, மலைக் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். மேலும் நுாறு ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் நீண்ட வரிசையில் சென்று தரிசித்தனர். முன்னதாக மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை