உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  விவசாயிகள் கூட்டம் வரும் 30ல் நடக்கிறது

 விவசாயிகள் கூட்டம் வரும் 30ல் நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 30ம் தேதி நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 30ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கிறது. இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். எனவே, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி