உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 31ல் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

31ல் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 31ம் தேதி நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 31ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம்; கூட்டுறவு, சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் தவறாது பங்கேற்க வேண்டும்.எனவே, இக்கூட்டத்தில், திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று, வேளாண் சார்ந்த குறையினை மனுவாக அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ