உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொடர் மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள் அவதி

தொடர் மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள் அவதி

திருத்தணி: திருத்தணியில் தொடர் மழையால், பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களை பறிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணி அடுத்த தாழவேடு, பட்டாபிராமபுரம், மேதினாபுரம், சீனிவாசபுரம், கோபாலபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயிகள் அதிகளவில் மல்லி, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பூ வகைகளை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், 'மோந்தா' புயலால், நேற்று காலை முதல் தொடர்ந்து துாறல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்தது. இதனால், விவசாயிகள் பூக்களை பறிக்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர். சிலர் பூக்களை பறிக்காததால் செடியிலேயே அழுகியது. இதனால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !