உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சி செயலர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

ஊராட்சி செயலர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் ஊராட்சி செயலர் வெங்கடேசன், 58 என்பவர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து வெங்கடேசன் உயிரிழந்தார். நேற்று தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம், காக்கும் கரங்கள் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் இறந்த ஊராட்சி செயலர் வெங்கடேசன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கினர். மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலர் தனசேகரன் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் உள்பட ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ