ராக்கெட் ஏவப்பட உள்ளதால் நாளை மீன் பிடிக்க தடை
கும்மிடிப்பூண்டி : ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவு தள மையத்தில் இருந்து, நாளை, மாலை 4:08 மணிக்கு, 'பிஎஸ்எல்வி சி-59/ப்ரோபா-3' விண்களம் ஏவப்பட உள்ளது.ஸ்ரீஹரிகோட்டா ஏவு தள மையம் அருகே, திருவள்ளூர் மாவட்ட மீனவ கிராமங்கள் அமைந்திருப்பதால், அன்றைய தினம், அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், மீன் பிடி தொழிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன் மீதான சுற்றறிக்கை ஒன்று, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் பொன்னேரி உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் சார்பில் அனைத்து மீனவ கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டன.அதில், நாளை நாள் முழுதும் மீன் பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் என, குறிப்பிடப்பட்டிருந்தது.