உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உருக்காலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: நான்கு பேர் சீரியஸ்

உருக்காலையில் தீக்குழம்பு சிதறி ஒருவர் பலி: நான்கு பேர் சீரியஸ்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராம எல்லையில், சூர்யதேவ் அலாய்ஸ்' என்ற பெயரில் கட்டுமான இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில், நேற்று, காலை 7:00 மணியளவில், கொதிகலனில் இருந்த இரும்பு தீக்குழம்பு வெளியே சிதறியது.அங்கு பணியில் இருந்த, உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாயல், 24, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்தர், 25, பாசில் ரகுமான், 28, பங்கஜ்குமார், 18, பிஹாட்ராம், 24, ஆகிய ஐந்து பேர் பலத்த தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சாயல் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த தில்காஷ், 18, என்பவர் லேசான தீக்காயங்களுடன், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்த விபத்து குறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சரவணன் தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ