உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசை ஜெகநாதர் கோவிலில் நாளை கருடசேவை; 16ல் தேரோட்டம்

திருமழிசை ஜெகநாதர் கோவிலில் நாளை கருடசேவை; 16ல் தேரோட்டம்

திருமழிசை:திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள 'பக்திஸாரர்' எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, 'தையில் மகம்' திருஅவதார மகோற்சவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.இந்த ஆண்டுக்கான, தையில் மகம் திருஅவதார மகோற்சவம், கடந்த டிச.25ம் தேதி, காலை 9:00 மணி முதல், 10:00 மணிக்குள், மகர லக்கனத்தில் பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது.பின், கடந்த 6ம் தேதி, மாலை 6:00 மணி முதல், 7:00 மணிக்குள் ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது.அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள், ஆழ்வாருக்கு தையில் மகம் திருஅவதார மகோற்சவ, விழாவில், காலை, மாலை சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலிப்பார்.'தையில் மகம்' திருஅவதார மகோற்சவம் விழாவை முன்னிட்டு, நாளை கருடசேவையும், வரும் 16ம் தேதி, தேர்த் திருவிழாவும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை