உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி இறப்பு

பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி இறப்பு

திருவள்ளூர், வெள்ளவேடு பகுதியில் தாயிடம் பால் குடித்த, 46 நாளே ஆன பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அடுத்த வெள்ளவேடைச் சேர்ந்தவர்கள் சூர்யா, 25, - சாருலதா, 23. இவர்களுக்கு, பிறந்து 46 நாளே ஆன ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, சாருலதா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தம்பதி, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !