உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுகள் வரும் 27க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

பொன்னேரி:பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.இங்கு, இரண்டு சுழற்சிகளில் வகுப்புகள் நடைபெறுகிறது. சுழற்சி -1ல் இளநிலை தமிழ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர உயிரி தொழில்நுட்பவியல், கணிணி பயன்பாட்டியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.சுழற்சி - 2-ல் இளநிலை வரலாறு, இயற்பியல், வேதியியல், தாவர உயிரி தொழில்நுட்பவியல், கணிணி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், இந்த கல்வியாண்டு முதல், புதிதாக சுழற்சி - 2-ல், தமிழ் வழியில் பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல் மற்றும் வணிக கூட்டுறவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டு உள்ளதால் அதற்கும் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு, www.tngasa.inஎன்ற இணையதளத்தில், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கல்லுாரியில் அமைந்துள்ள உதவி மையத்தை அணுகி கூடுதல் விபரங்களை பெறலாம் என, கல்லுாரி முதல்வர் தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !