கைம்பெண் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
திருவள்ளூர்:கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட அளவில், விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய இ--சேவை மையம் அல்லது www.tnwidowwelfareboard.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.