மேலும் செய்திகள்
தொழில் பழகுனர் பயிற்சி முகாம்
04-Apr-2025
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்ககேற்று, 200க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இம்முகாமில் பங்கேற்க உள்ள நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்று, 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்', கணக்காளர், டெக்னீஷியன், நிர்வாகப் பணி போன்ற பல்வேறு வகை பணி வாய்ப்பை பெற்று பயனடையலாம்.தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. விருப்பம் உள்ளோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
04-Apr-2025