மேலும் செய்திகள்
காஞ்சியில் ஆண் சடலம மீட்பு
08-Dec-2024
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, காக்களூர் ஏரியில், பாதாள விநாயகர் கோவில் அருகே, ஆண் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் வி.ஏ.ஓ.,வுக்கு பகுதிவாசிகள் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் ஏரிக்கு சென்று ஆண் உடலை கைப்பற்றி,திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.சடலமாக மீட்கப்பட்டவருக்கு 45 வயதிருக்கும் என்றும், அவர் இறந்து மூன்று நாள் இருக்கும் எனவும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் திருவள்ளூர் தாலுகா போலீசார் தெரிவித்தனர்.
08-Dec-2024