உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

கடம்பத்துார்:திருவள்ளூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 52. இவர், கடந்த 9ம் தேதி மனைவி மற்றும் இரு மகன்களுடன், கடம்பத்துார் அடுத்த மடத்துக்குப்பம் பகுதியில் நடந்த பச்சையம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தார்.பின், அன்றிரவு அப்பகுதியில் உள்ள தன் சகோதரி வீட்டில், குடும்பத்துடன் மாடியில் துாங்கி கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை துாக்க கலக்கத்தில் அவரது மகன் அஜய், 22, என்பவர் கழிப்பறை செல்வதற்காக சென்ற போது மாடியிலிருந்து தவறி விழுந்தார். உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி