உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

ஊத்துக்கோட்டை:பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.பெரியபாளையம், தண்டுமா நகரில் வசித்து வந்தவர் விக்னேஷ், 30. இவர் கடந்த மாதம், 17ம் தேதி ஏரிக்குப்பம் கிராமத்தில் பனை மரத்தில் ஏறிய போது தவறி கீழே விழுந்தார்.காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு நேற்று உயிரிழந்தார். பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை