உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை விபத்தில் மேலாளர் படுகாயம்

சாலை விபத்தில் மேலாளர் படுகாயம்

திருத்தணி, திருத்தணி செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 34. இவர், பொன்பாடி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றவர், இரவு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.திருத்தணி புதிய பைபாஸ் சாலையில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், பிரசாந்த் பலத்த காயமடைந்தார். பின், திருவள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை