உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

திருவள்ளூர்:சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையாக சீரமைப்பு பணி தற்போது நடந்து வருகிறது.இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் வேகத்தை குறைத்து விபத்தை தடுக்கும் வகையில், திருமழிசை, பாப்பன்சத்திரம், தண்டலம், செட்டிபேடு உட்பட பல இடங்களில் ஆவடி மாநகர காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டு தடுப்புகளால் சில நேரங்களில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதோடு விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேசிய நெடுஞ்சாலை ஆணைய சட்ட விதிகளின் கீழ் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித தடுப்புகளும் வைக்கக்கூடாது. காவல் துறையினர் நெடுஞ்சாலைத்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கின்றனர்.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை