உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வர்ணம் பூசப்படாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்

வர்ணம் பூசப்படாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருவாலங்காடு,:திருவாலங்காடு --- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், சின்னம்மாபேட்டை, ஒரத்தூர், சக்கரமநல்லூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பள்ளி, அரசு அலுவலகங்கள் மற்றும் வளைவு சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி, 11 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, சின்னம்மாபேட்டை, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், அழிந்தும் உள்ளது.வேகத்தடையின் மீது இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி