மேலும் செய்திகள்
பெண் மீது தாக்குதல் இருவருக்கு வலை
19-Mar-2025
போக்சோவில் வாலிபர் கைது
21-Mar-2025
திருத்தணி:திருத்தணி அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேந்தவர் வெங்கடேசன், 40. இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் வெங்கடேசன், 45, என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. நேற்று வெங்கடேசன், தன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது, கோபால் மகன் வெங்கடேசன், உறவினர்களான குணா, பார்த்திபன், தேவராஜ் ஆகியோருடன் வந்து, மின்மோட்டாரின் மின் ஒயரை துண்டித்தார்.இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், வெங்கடேசனை கல்லால் தாக்கினர். இதில், பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
19-Mar-2025
21-Mar-2025