உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலை கவரைப்பேட்டையில் மக்கள் அவதி

ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலை கவரைப்பேட்டையில் மக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி: சாலையோர ஆக்கிரமிப்புகளால் கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலை குறுகி, ரயில் பயணியரும், பகுதி மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், 300க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த சாலையை ரயில் பயணியர் மற்றும் மக்கள், தினசரி பயன்படுத்தி வருகின்றனர். சாலையோர ஆக்கிரமிப்புகளால், சாலை குறுகி, கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலைய சாலை நுழையும் இடத்தில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பழக்கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், 30 அடி அகலம் இருக்க வேண்டிய சாலை, 10 அடி அகல சாலையாக குறுகியுள்ளது. இதனால், பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் நிலைய சாலைக்குள் நுழைய முடியாமல், ரயில் பயணியர் தவித்து வருகின்றனர். பல சமயம் குறித்த நேரத்தில் ரயில் நிலையம் செல்ல முடியாமல், ரயிலை தவற விட நேரிடுவதாக ரயில் பயணியர் தெரிவித்து வருகின்றனர். ரயில் நிலைய சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கவரைப்பேட்டை போலீசார் அகற்ற வேண்டும். சாலையை விரிவாக்கம் செய்ய கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் மற்றும் கவரைப்பேட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை