மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டம் 252 மனுக்கள் ஏற்பு
17-Sep-2024
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 470 மனுக்கள் ஏற்கப்பட்டன.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தவர்கள், நிலம் சம்பந்தமாக 129, சமூக பாதுகாப்பு திட்டம் 54, வேலைவாய்ப்பு வேண்டி 48, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 96, இதர துறை 143 என, மொத்தம் 470 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியினை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.திருவள்ளுர் மாவட்டத்தில் 2023 - 24ல், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகமாக வங்கி கடன் இணைப்பு வழங்கிய வங்கிகளுக்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கியாளர் விருது வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக இருவருக்கு திருமண உதவித்தொகை தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயகுமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Sep-2024