மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 418 மனுக்கள் ஏற்பு
12-Nov-2024
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 423 மனுக்கள் ஏற்கப்பட்டன.திருவள்ளூரில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 144, சமூக பாதுகாப்பு திட்டம் 97, வேலை வாய்ப்பு வேண்டி 76, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 63, இதர துறை 52 என, மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன் - பொது, சத்தியபிரசாத் - தேர்தல் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Nov-2024