உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 556 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 556 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 556 மனுக்கள் ஏற்கப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 125, சமூக பாதுகாப்பு திட்டம் 75, வேலைவாய்ப்பு வேண்டி 70, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 92 மற்றும் இதர துறை 194 என, மொத்தம் 556 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியை வழங்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ